Sunday 30 December 2018

கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்படி காதலித்து மணந்தார் தெரியுமா?


மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் என மூன்று பேரை திருமணம் செய்தவர் ஆவார்.

கடந்த 1944-ல் பத்மாவதியை கருணாநிதி முதன் முதலில் பார்த்தார்.

பிரபல பின்னணி பாடகியான சி.எஸ் ஜெயராமனின் தங்கை தான் பத்மாவதி ஆவார். 1946-ல் கருணாநிதிக்கும், பத்மாவதிக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

பின்னர் உடல்நலக்குறைவால் பத்மாவதி 1948-ல் உயிரிழந்தார், கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு மு.க முத்து என்ற மகன் உள்ளார்.

இதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து 1952-ல் தயாளு அம்மாளை கருணாநிதி திருமணம் செய்து கொண்டார்.

கருணாநிதி - தயாளு தம்பதிக்கு மு.க அழகிரி, மு.க ஸ்டாலின், மு.க தமிழரசு மற்றும் செல்வி என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இதையடுத்து நடன குழு ஒன்றில் நடனம் ஆடிய ராஜாத்தியை 1960-களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி பார்த்தார்.

இதையடுத்து இருவரும் நட்பாகி காதலிக்க தொடங்கினர், பின்னர் தன்னை விட 21 வயது இளையவரான ராஜாத்தியை கருணாநிதி திருமணம் செய்தார்.

கருணாநிதி - ராஜாத்தி தம்பதியின் மகள் பெயர் கனிமொழி.

No comments:

Post a Comment