பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீரர் இன்று உணவுக்காக தெருவில் பிச்சை எடுப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மன்மோகன் சிங் லோதி என்பவர், தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் தேசிய அளவில் வென்றுள்ளதால் இவருக்கு உதவி தொகையும் அரசு வேலையும் வழங்கப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த அறிவிப்பின்படி லோதிக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்காததால் வறுமை பின்னணியில் உள்ள அவர் கடைசியில் உணவு தேவைக்காக தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குடும்ப நிலையால் விளையாட்டிலும் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை எனவே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன் என லோதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment