Friday 28 June 2019

அது தாக்க வருது..... ஓடுங்க ‘டப்பிங்’ பட பாணியில் மைதானத்தில் படுத்த வீரர்கள்!

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 35வது லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கபடி ஆடிய தேனீக்கூட்டம்:

இதில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது, 48வது ஓவரில் இஸ்ரு உதனா, சுரங்கா லக்மல் மேட்டிங் செய்து கொண்டிருந்தனர். தென் ஆப்ரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் பவுலிங் செய்தார்.

அப்போது மைதானத்துக்குள் திடீரென தேனீக்கள் கூட்டம் புகுந்தது. இதையடுத்து மைதானத்தில் இருந்த வீரர்கள் பயத்தில் நடுங்கினர். தேனீக்களிடம் கொட்டுப்படுவதில் இருந்து தவிர்க்க மைதானத்தில் அப்படியே படுத்துக்கொண்டனர்.

சிறிது நேர தாமதம்:

களத்தில் இருந்த அம்பயர்களும் படுத்துக்கொண்டனர். தேனீக்கள் டி காக் அருகே சிறிது நேரம் ரீங்காரமிட்டு பின் மைதானத்தில் இருந்து வெளியேறியது. இதையடுத்து சிறிது நேர தாமதத்துக்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது. இந்த சைக்கிள் கேப்பில் தென் ஆப்ரிக்க வீரர் மோரிஸ் தண்டால் எடுத்தது வேடிக்கையாக அமைந்தது.

வைரலாகும் மீம்ஸ்:

இந்நிலையில் இந்த அபூர்வ சம்பவத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களாக உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment