Saturday 29 June 2019

திண்டுக்கல் லியோனிக்கு திடீர் சுகவீனம்.. புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையாவுடன் நம் நினைவுக்கு வருவது திண்டுக்கல் லியோனிதான். லியோனியின் பேச்சுக்கள் கல் நெஞ்சுக்காரர்களையும் கரைய வைத்து சிரிக்கவைத்து விடும்.

வெகு இயல்பான பேச்சு, சுருதி சுத்தமாக இவர் பாடும் பாட்டுக்கள் எல்லாமே ரொம்ப சீக்கிரத்தில் மக்களின் மனதில் இடம் பிடிக்க காரணமாக இருந்தது.

அடிப்படையில் இவர் ஒரு ஆசிரியர், கங்கா கௌரி என்ற படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

பிறகு திடீரென திமுக பிரசார கூட்ட மேடையை அதகளப்படுத்த ஆரம்பித்தார். அதிமுக தரப்பை கடுமையாக விமர்சித்தும் பட்டிமன்றங்களை நடத்தினார். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், லியோனிக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லியோனியை அனுமதித்துள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment