நாளை நமதே திரைப்படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பை இழந்தது இன்றைக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3-ல் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பேசிவருகிறார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது:
என்னிடம் எக்குத்தப்பாக கேள்விகளை கேட்டுவிடாதீர்கள்.. இருந்தாலும் இப்போதெல்லாம் எக்குதப்பாக கேள்வி கேட்கின்றனர்.. அதற்கும் இப்போது பதிலளிக்க பழகிவிட்டேன்.
எம்.ஜி.ஆரின் நாளை நமதே திரைப்படத்தை சேது மாதவன் இயக்கினார். அப்போது அதில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கும் கதா பாத்திரம் எனக்கு கிடைத்தது. என்னுடைய கால்ஷீட்டுக்காக 1 மாதம் காத்திருந்தனர்.
ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அன்று மட்டும் எம்ஜிஆருடன் நாளை நமதே என நானும் பாடியிருக்க வேண்டியது. அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் இன்றைக்கு பெரும் இழப்பு என்பதை உணருகிறேன்.
நாளை நமதே என்பதுதான் எங்களது கொள்கை. அதனால் அந்த பாடலை நானும் ஒளிபரப்பிக் கொண்டிருந்திருக்கலாம்.. அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3-ல் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பேசிவருகிறார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது:
என்னிடம் எக்குத்தப்பாக கேள்விகளை கேட்டுவிடாதீர்கள்.. இருந்தாலும் இப்போதெல்லாம் எக்குதப்பாக கேள்வி கேட்கின்றனர்.. அதற்கும் இப்போது பதிலளிக்க பழகிவிட்டேன்.
எம்.ஜி.ஆரின் நாளை நமதே திரைப்படத்தை சேது மாதவன் இயக்கினார். அப்போது அதில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கும் கதா பாத்திரம் எனக்கு கிடைத்தது. என்னுடைய கால்ஷீட்டுக்காக 1 மாதம் காத்திருந்தனர்.
ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அன்று மட்டும் எம்ஜிஆருடன் நாளை நமதே என நானும் பாடியிருக்க வேண்டியது. அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் இன்றைக்கு பெரும் இழப்பு என்பதை உணருகிறேன்.
நாளை நமதே என்பதுதான் எங்களது கொள்கை. அதனால் அந்த பாடலை நானும் ஒளிபரப்பிக் கொண்டிருந்திருக்கலாம்.. அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன்.
No comments:
Post a Comment