Wednesday 26 June 2019

காவி ஜெர்சியை வைத்து கலகத்தை துவங்கிய காங்கிரஸ்!

இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், எல்லா அணிகளும் மாற்று ஜெர்சி அறிவித்து அதை ஒரே நிற ஜெர்சி கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து பங்கேற்று வருகின்றன.

காவி ஜெர்சி:

அதில் தொடரை நடத்தும் என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 30ம் தேதி இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் காவி நிற ஜெர்சி அணிந்து பங்கேற்க்வுள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு:

இதற்கு காங்கிரஸ் கட்சி அரசியல் சாயம் பூசி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ. அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஒரே காவி மயம்:

இது தொடர்பாக மகராஷ்டிரா எம்.எல்.ஏ., எம்.ஏ. கான் கூறுகையில், ‘மத்திய அரசு எல்லா விஷயங்களையும், வேறு ஒரு பார்வையில் பார்க்கிறது. அதை கடந்த ஐந்து ஆண்டில் கண்கூடாக பார்க்க முடிந்தது. நாட்டையே காவி மயமாக மற்ற முயற்சிக்கிறார் மோடி’ என்றார்.

பல வண்ணம்:

ஆனால் ஐசிசி., தரப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு பல வண்ணம் கொண்ட ஜெர்சிக்களை கொடுத்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் பழைய டி-20 ஜெர்சியில் இடம் பெற்றதால் காவி ஜெர்சி தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment