புதிய கல்வி கொள்கை குறித்து எதுவும் தெரியாது என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்திருந்தார். இதை அதிமுக, பாஜக தலைவர்கள் எதிர்த்தனர்.
சூர்யாவுக்கு திரை உலகத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இன்று இயக்குநர்கள் சங்க தேர்தல் நடைபெற்ற போது சூர்யாவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
அப்போது இயக்குநர் ஷங்கர், புதிய கல்வி கொள்கை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இதற்கு பதிலளித்த சீமான், திரைப்படங்களில் பஞ்ச் வசனம் பேசுவோர் இப்போதுதான் பேச வேண்டும். ஷங்கரின் கருத்து ஒரு இயக்குநருக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
புதிய கல்வி கொள்கையை நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்திருந்தார். இதை அதிமுக, பாஜக தலைவர்கள் எதிர்த்தனர்.
சூர்யாவுக்கு திரை உலகத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இன்று இயக்குநர்கள் சங்க தேர்தல் நடைபெற்ற போது சூர்யாவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
அப்போது இயக்குநர் ஷங்கர், புதிய கல்வி கொள்கை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இதற்கு பதிலளித்த சீமான், திரைப்படங்களில் பஞ்ச் வசனம் பேசுவோர் இப்போதுதான் பேச வேண்டும். ஷங்கரின் கருத்து ஒரு இயக்குநருக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
No comments:
Post a Comment