Sunday 19 August 2018

பற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா? இந்த 4 முறையை பின்பற்றுங்க போதும்

பற்களில் இருக்கும் வெண்மையும் ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். தகாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் குறைந்துவிடும்.

பற்களை வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து வெண்மையாக பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன் தரும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரணடி தேங்காய் எண்ணெய்யை வாயிற்குள் ஊறி, 3 அல்லது 4 நிமிடங்கள் கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்னெய்யை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும்.
நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடார் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்களில் தேயிக்கவேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை பெறும்.
பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் சிறப்பானது எலுமிச்சை பழம். இதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேயித்து அதன் பின் தண்ணீரில் கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை உடனே பார்க்கலாம்.
பேக்கிங் சோடாவை பசையாக மாற்றி, அதை பற்களில் தேயித்து கொப்பளிக்க வேண்டு. இது உடனே பலன் தரும்.

No comments:

Post a Comment