Sunday 19 August 2018

தத்தளிக்கும் கேரளாவிலும் தொடரும் பிக்பாஸ்! ஹவுஸ்மேட்சிடம் கூறிய மோகன்லால்..

கேரள மாநிலம் முழுவதுமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மலையாளத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நிலை என்ன என்று பலர் மனதில் கேள்வி எழும்பி இருக்கும்.

ஒரு வாரமாக கடும்பாதிப்பில் இருக்கும் கேராளாவிற்கு பல மாநிலங்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு போலவே அங்கும் பிக்பாஸ் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு நேற்றைய ஒளிபரப்பில் தான் மோகன்லால் கேரள மாநிலம் வெள்ளத்தால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது என்று ஹவுஸ்மேட்ஸிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அவர்களிடம் பேச வைத்தார். இதனையடுத்து தங்கள் மாநிலம் மீண்டும் பழைய நிலைக்கு வர அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் பிராத்தனை செய்தனர்.

No comments:

Post a Comment