Saturday 11 August 2018

ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வரப்போகும் புதிய உத்தரவு! ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி

ஆப்பிள் உட்பட பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு புதிய உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன்கள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்தந்த நிறுவனங்கள் வெவ்வேறு விதமான Charging board மற்றும் Cable-களை வழங்கி வருகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவுகள் தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது, பயனாளிகள் புதிய சாதங்களை வாங்கும்போது பழைய ஸ்மார்ட்போன் Charger-களை வீசிவிடுகிறார்கள். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தைகளில் உற்பத்தியாகும் கைப்பேசிகளுக்கு பொதுவான Charging board-யை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பு சில மாற்றங்களை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங், நோக்கியா என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பொதுப்படையான கைப்பேசி Charger -களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், எந்த நிறுவனமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. எனவே தான் ஐரோப்பிய கூட்டமைப்பு தற்போது ஆய்வு ஒன்றை நடத்தி, USB மற்றும் Type-C ரக Charger-களை பொதுப்படையாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் USB மற்றும் Type-Cஐ வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, ஐபோன்களுக்கு இந்த வகை Charger-கள் தான் வழங்கப்படும்.

No comments:

Post a Comment