ஆப்பிள் உட்பட பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு புதிய உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன்கள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்தந்த நிறுவனங்கள் வெவ்வேறு விதமான Charging board மற்றும் Cable-களை வழங்கி வருகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவுகள் தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, பயனாளிகள் புதிய சாதங்களை வாங்கும்போது பழைய ஸ்மார்ட்போன் Charger-களை வீசிவிடுகிறார்கள். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தைகளில் உற்பத்தியாகும் கைப்பேசிகளுக்கு பொதுவான Charging board-யை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பு சில மாற்றங்களை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங், நோக்கியா என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பொதுப்படையான கைப்பேசி Charger -களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எந்த நிறுவனமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. எனவே தான் ஐரோப்பிய கூட்டமைப்பு தற்போது ஆய்வு ஒன்றை நடத்தி, USB மற்றும் Type-C ரக Charger-களை பொதுப்படையாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் USB மற்றும் Type-Cஐ வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, ஐபோன்களுக்கு இந்த வகை Charger-கள் தான் வழங்கப்படும்.
ஐபோன்கள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்தந்த நிறுவனங்கள் வெவ்வேறு விதமான Charging board மற்றும் Cable-களை வழங்கி வருகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவுகள் தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, பயனாளிகள் புதிய சாதங்களை வாங்கும்போது பழைய ஸ்மார்ட்போன் Charger-களை வீசிவிடுகிறார்கள். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தைகளில் உற்பத்தியாகும் கைப்பேசிகளுக்கு பொதுவான Charging board-யை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பு சில மாற்றங்களை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங், நோக்கியா என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பொதுப்படையான கைப்பேசி Charger -களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எந்த நிறுவனமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. எனவே தான் ஐரோப்பிய கூட்டமைப்பு தற்போது ஆய்வு ஒன்றை நடத்தி, USB மற்றும் Type-C ரக Charger-களை பொதுப்படையாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் USB மற்றும் Type-Cஐ வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, ஐபோன்களுக்கு இந்த வகை Charger-கள் தான் வழங்கப்படும்.
No comments:
Post a Comment