Saturday 11 August 2018

ரஜினியே செய்றாரு... நான் பண்ணா என்ன? - பிக்பாஸ் வைஷ்ணவி

பிக்பாஸ் வீட்டுக்கு நேற்று பியார் பிரேமா காதல் டீம் வந்திருந்தனர். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் முதல் சீசன் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் வீட்டில் இருந்து போனபிறகு தற்போது போட்டியாளர்கள் ஜோடியாக நடிப்பது பற்றி பேசிக்கொண்டனர்.

"எனக்கு பொன்னம்பலம் அண்ணன் கூட ஒரு படம் நடிக்கணும்னு ஆசை" என வைஷ்ணவி கூற, அதற்கு பொன்னம்பலம் "எனக்கு ஜோடியா நடிக்கிறியா? நான் ஹீரோவா பண்றேன்" என கேட்டார்.

"பண்லாமே.. வயசுல என்ன பிரச்சனை.. கேரக்டர் தான் பிரச்சனை.. கபாலியில் ரஜினி பண்ணலையா? .. கதை நல்ல இருக்கனும்" என வைஷ்ணவி கூறியுள்ளார்.

அதன்பிறகு சென்ட்ராயன் காமெடியாக பாலாஜியை பார்த்து "நீ வைஷ்ணவிக்கு ஜோடியா நடிப்பியா?" என கேட்க, பாலாஜி உடனே "ம்ம்.." என கூறி தலையாட்டினார்.

No comments:

Post a Comment